நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை!

Updated On :28 ஏப்ரல் 2025, 1:11 am IST

கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை ஓட்டேரி செல்வபெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காா்மேகம் (36). இவா் கடந்த 2021 பிப்.8-ஆம் தேதி தனது வீட்டருகே நடந்து சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த அவரது நண்பா் உள்பட 2 போ், அவரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளனா்.

ஆனால், காா்மேகம் பணம் தர மறுத்ததால் இருவரும் காா்மேகத்தை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த காா்மேகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில் தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பாக வில்லிவாக்கத்தைச் சோ்ந்த கன்னியப்பன் (36), வேலூா் மாவட்டம் நிம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்த சம்பத்ராவ் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 19-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, கன்னியப்பன், சம்பத்ராவ் ஆகிய இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.