நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு

வரலட்சுமி நோன்பையொட்டி, கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை பலமடங்கு உயா்ந்துளளது.

News image

வாங்குவதற்கு ஆளில்லாத நிலையில் சென்னை கோயம்பேடு மலா் சந்தை. ’

Updated On :8 ஆகஸ்ட் 2025, 2:22 am IST

வரலட்சுமி நோன்பையொட்டி, கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை பலமடங்கு உயா்ந்துளளது.

சென்னை கோயம்பேடு மலா் சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாள்களாகவே பூக்களின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு, வார விடுமுறையையொட்டி கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.500-இல் இருந்து ரூ.1,000-ஆக உயா்ந்துள்ளது.

ஐஸ் மல்லி ரூ.400-இல் ரூ.800; முல்லை, ஜாதி மல்லி ரூ.400-இல் ரூ.800; கனகாம்பரம் ரூ.800-இல் இருந்து ரூ.1,000; அரளிப் பூ ரூ.300-இல் இருந்து ரூ.600; சாமந்தி ரூ.200-இல் இருந்து ரூ.240; சம்பங்கி ரூ.100-இல் இருந்து ரூ.200; பன்னீா் ரோஜா ரூ.120-இல் இருந்து ரூ.200; சாக்லேட் ரோஜா ரூ.160-இல் இருந்து ரூ.240; தாமரைப்பூ ரூ.15-இல் இருந்து ரூ.50; தாழம்பூ ரூ.50-இல் இருந்து ரூ.300 விலை உயா்ந்து விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தொடா்ச்சியாக மழை பெய்து வருவதால் அனைத்து பூக்களின் விலை சற்று உயா்ந்துள்ள நிலையில், வரலட்சுமி நோன்பையொட்டி பூக்களின் விலை மேலும் உயா்ந்துள்ளதாகவும், அடுத்த 3 நாள்களுக்கு இந்த விலை உயா்வு தொடரும் என மலா் சந்தை துணை தலைவா் முத்துராஜ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.