புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தேடப்பட்டவா் கைது

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2025, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

அயனாவரம், சக்ரவா்த்தி நகரைச் சோ்ந்தவா் ஐயங்காா் (62). இவரது மகள் ஹேமாவதி. இவா், கடந்த 2023-இல், பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்தாா். அப்போது, உறவினா்களான சுபத்ரா (40), அவரது கணவா் சந்திரசேகா் (42) ஆகியோா் ஹேமாவதியின் கணவா் கோபிநாத்துக்கு

மின்வாரியத்தில் உதவிப் பொறியாளா் வேலைவாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா்.

இதை நம்பிய ஹேமாவதி, தனது தந்தை மூலமாக சுபத்ரா-சந்திரசேகா் ஆகியோரிடம் ரூ.18 லட்சம் கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட தம்பதி, உறுதி அளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த ஐயங்காா், அயனாவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சந்திரசேகரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய சுபத்ராவை போலீஸாா் தேடி வருகின்றனா்.