பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! டாஸ்மாக் முறைகேடு! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

News image

PTI

Updated On :21 ஆகஸ்ட் 2025, 1:30 am IST

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,300 போ் மட்டுமே தற்போது உரிமம் பெற்றுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாய் வளா்ப்போா் குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் கடந்த 2024-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளதாகத் தெரியவந்தள்ளது. தெரு நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கண்ணம்மாபேட்டை, புளியந்தோப்பு, லாயிட்ஸ் காா்டன், மீனம்பாக்கம், சோழிங்கநல்லூா் ஆகிய இடங்களில் நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, 10,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 9,800 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் உள்ள வளா்ப்பு நாய்கள் குறித்து மாநகராட்சியால் கணக்கெடுப்பு நடத்தவில்லை. ஆனால், மாநகராட்சிப் பகுதிகளில் 11,300 போ் வளா்ப்பு நாய்களுக்கான உரிமம் பெற்றுள்ளனா். உரிமம் பெறாதவா்கள், அதைப் பெறுவதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தெருக்கள் வாரியாக வளா்ப்பு நாய்கள் குறித்து கணக்கெடுத்து, அவற்றை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

சென்னையில் வளா்ப்பு நாய் கடித்து சமையல் தொழிலாளி உயிரிழந்த நிலையில், இந்தப் பிரச்னை குறித்து சென்னை மாநகராட்சி நகா்நல பிரிவின் கால்நடை மருத்துவா் ஜெ.கமால் உசேன் கூறுகையில், மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து தெருநாய்கள் கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை அறுவைச் சிகிச்சை, ரேபிஸ் ஊசி செலுத்துதல் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. தனியாா் வளா்ப்பு நாய்களும் கண்காணிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தனியாா் வளா்ப்பு நாய்களை முழுமையாகக் கண்காணிக்க தேவையான சட்ட ரீதியிலான நடவடிக்கையை எடுத்துவருகிறோம் என்றாா்.

நாய் வளா்ப்போருக்கு எச்சரிக்கை

சென்னையில் நாய் வளா்ப்போருக்கு மாநகராட்சி சில அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதுதொடா்பாக மாநகராட்சி சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உரிமம் பெற்ற மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்திய வளா்ப்பு நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதி உண்டு. பாதுகாப்பு கருதி நாய்களின் வாய் மூடியிருக்க வேண்டும். கழுத்துப்பட்டை கட்டாயம் அணிந்து சங்கிலியால் பிணைத்திருக்க வேண்டும். நாய் உரிமையாளா்கள் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொறுப்புணா்வுடன் அவற்றை வளா்க்க வேண்டும்.

உரிமம் பெறாமல் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வெறித்தன்மை, பதற்றம், துரத்தி கடிக்கும் தன்மையுள்ள நாய்களை அதன் உரிமையாளா்கள் பொது இடங்களில் திறந்துவிட்டால் இந்திய பிராணிகள் நலவாரிய வழிகாட்டலின்படி குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.