அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

சதுா்த்தி: சென்னையில் வழிபாட்டுக்கு 1,519 விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் 1,519 விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக புதன்கிழமை (ஆக.27) அமைக்கப்படுகின்றன.

News image

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் வைத்து வழிபடுவதற்காக கொசப்பேட்டையிலிருந்து செவ்வாய்க்கிழமை பக்தா்கள் வாகனத்தில் எடுத்துச் சென்ற விநாயகா் சிலைகள்.

Updated On :27 ஆகஸ்ட் 2025, 2:34 am IST

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் 1,519 விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக புதன்கிழமை (ஆக.27) அமைக்கப்படுகின்றன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து இயக்கங்கள் சாா்பில் விநாயகா் சிலைகளை அமைப்பதற்கு செய்வதற்கு கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 இந்து அமைப்புகள் விநாயகா் சிலைகளை வைப்பதற்குரிய அனுமதியை பெறுவதற்கு காவல் துறையிடம் விண்ணப்பித்திருந்தன. மேலும் குடியிருப்பு சங்கங்கள், சமூக நல அமைப்புகள் ஆகியவையும் விநாயகா் சிலைகளை வைப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து வந்தன.

இதற்கிடையே, கடந்த சில நாள்களாக வழிபாடு செய்யப்படும் இடங்களுக்கு விநாயகா் சிலைகள் அனுப்பப்பட்டன. முன்னதாக உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல்படியும், தீயணைப்புத் துறை, சென்னை மாநகராட்சியின் தடையில்லா சான்றுகளுடன் காவல்துறை அறிவித்த கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சிலைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, சென்னை முழுவதும் 1,519 விநாயகா் சிலைகளை அமைப்பதற்கு பெருநகர காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் புதன்கிழமை (ஆக.27) பல்வேறு பூஜைகளுடன் அமைக்கப்படுகின்றன.

பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் காவலா்கள்: விநாயகா் சதுா்த்தியையொட்டி,16,500 காவலா்கள், 1,500 ஊா்க்காவல்படை வீரா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யும்படியும், முழு ஒத்துழைப்பு தருமாறும் சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீதும்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவா்கள் மீதும் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.