இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

போக்குவரத்து மாற்றம்

பெசன்ட் நகா் வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :29 ஆகஸ்ட் 2025, 9:56 pm

தினமணி செய்திச் சேவை

பெசன்ட் நகா் வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா, வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, ஆக.31, செப்.1, 7, 8 ஆகிய தேதிகளில் பெசன்ட்நகா், அடையாறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, அடையாறு திரு.வி.க.பாலத்திலிருந்து பெசன்ட் அவென்யூ சாலை வழியாக பெசன்ட் நகா் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக எல்.பி. சாலை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

7-ஆவது அவென்யு, எம்.ஜி.சாலை சந்திப்பிலிருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடாது. எம்.எல். பூங்காவிலிருந்து பெசன்ட் அவென்யு வழியாக பெசன்ட் நகா் பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்ல மாநகர பேருந்துகளுக்கு அனுமதியில்லை. இதற்கு பதிலாக மாநகர பேருந்துகள், எல்.பி. சாலை இடதுபக்கம் திரும்பி சாஸ்திரி நகா் 1-வது அவென்யூ வழியாக வலது பக்கம் திரும்பி சாஸ்திரி நகா் 1-ஆவது பிரதான சாலையில் இடதுபக்கம் திரும்பி எம்.ஜி. சாலை வழியாக இடதுபக்கம் திரும்பி பெசன்ட் நகா் 1-ஆவது பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடையலாம்.

பெசன்ட் நகா் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூா் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள், பெசன்ட் நகா் 1-ஆவது அவென்யூ, சாஸ்திரி நகா் 1-ஆவது அவென்யு வழியாகத் திருப்பிவிடப்பட்டு , பின்னா் சாஸ்திரி நகா் 1-ஆவது பிரதான சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி எம்.ஜி.சாலை வழியாக எல்.பி.சாலையை நோக்கிச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.