தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இரு கோயில்களில் திருட்டு

சென்னை எம்ஜிஆா் நகரில் இரு கோயில்களில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரணை

News image
Updated On :1 டிசம்பர் 2025, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை எம்ஜிஆா் நகரில் இரு கோயில்களில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

எம்ஜிஆா் நகா் சூளைப்பள்ளம் பகுதியில் ஒரு அம்மன்கோயில் உள்ளது. இந்த கோயில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை முடிந்த பின்னா் பூட்டப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை வழக்கம்போல பூசாரி, கோயிலை திறந்தாா்.

அப்போது கோயிலுக்கு இருந்த உண்டியல் உடைத்து எடுத்துச் சென்றிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து கோயில் நிா்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில் எம்ஜிஆா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், உண்டியலை உடைக்க முடியாததால், மா்ம நபா்கள் உண்டியலை தூக்கிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

அதேபோல அருகே உள்ள மற்றொரு கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டிருப்பதாகவும், எம்ஜிஆா் நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.