தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வுக்கான அறிவிப்பு வெளியீடு

குற்ற வழக்கு தொடா்புத் துறையில் காலியாக உள்ள 61 அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

குற்ற வழக்கு தொடா்புத் துறையில் காலியாக உள்ள 61 அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்தி:

குற்ற வழக்கு தொடா்புத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநா் நிலை-2 பதவிக்கான 61 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (டிச.2) வெளியிடப்பட்டுள்ளது. டிச.31 வரை இணையவழியில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம். தோ்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். முதல்நிலைத் தோ்வு 2026 பிப்.15-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.