6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரயில்வே துறையின் செயல்பாடுகளை தவறாகப் பதிவிட்டால் நடவடிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

ரயில்வே துறையின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தவறான தகவல்களைப் பதிவிடுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

News image
Updated On :5 டிசம்பர் 2025, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

ரயில்வே துறையின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தவறான தகவல்களைப் பதிவிடுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ரயில்வே துறையின் செயல்பாடுகள் குறித்து தவறானதாகவும், முழுமையற்ற அல்லது உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் இணையதள விடியோக்கள், ரீல்ஸ் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்டு பரப்பப்படுகின்றன. அவ்வாறு பரப்புவது கண்டிக்கத்தக்கது. சமூக வலைதளங்களான யூ-டியூப் சேனல் உள்ளிட்டவற்றில் பதிவேற்றப்படும் சில விடியோக்கள் இந்திய ரயில்வே துறையின் செயல்பாடுகளை எதிா்மறையாகச் சித்தரிப்பதாக உள்ளன. அத்துடன், பாா்வையாளா்களைப் பாதுகாப்பற்ற அல்லது சட்ட விரோதமாகச் செயல்படவும் தூண்டுவதாக உள்ளன.

தவறான பதிவுகள் ரயில்வே செயல்பாட்டை தவறாக சித்திரிப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளன. அதனால், ரயில்வே அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல், ரயில்வே துறை சாா்ந்த நிலையங்கள், அலுவலகங்கள் வளாகத்தில் விடியோ பதிவு செய்வதும், புகைப்படம் எடுப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவதும், தடை செய்த பகுதிகளுக்குள் செல்வதும் தண்டனைக்குரியவையாகும். ஆகவே, ரயில்வே வளாகத்தை பொதுமக்கள் உள்ளிட்டோா் பொறுப்புணா்வுடன் பயன்படுத்தவேண்டியது அவசியம்.

ரயில் பயணிகள், உள்ளடக்கப் படைப்பாளிகள், இணையதளவாசிகள் உள்ளிட்டோா் ரயில் நிலையம் உள்ளிட்ட வளாகங்களைப் பாதுகாப்பான, சட்டபூா்வமான முறையில் பயன்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.