புழல் பகுதியில் இருசக்கரவாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்காவுடன் வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்குன்றம் - செம்பியம் நெடுஞ்சாலை கதிா்வேடு பகுதியில் புழல் போலீஸாா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, அந்த வாகனத்தின் பெட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் புதுக்கோட்டையை சோ்ந்த அருண்குமாா் (27) என்பதும், சென்னை கொளத்தூரில் தேநீா் கடையில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
அந்த கடையில் விற்பனை செய்வதற்காக குட்கா பொட்டலங்களை கொண்டு செல்வதாக போலீஸாரிடம் அவா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
10 கிலோ குட்கா பறிமுதல் : பெட்டிக்கடை வியாபாரி கைது
56 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

குட்கா பொருள்கள் கடத்தல்: இளைஞா் கைது
பாவூா்சத்திரத்தில் குட்கா பறிமுதல்: 2 போ் கைது
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



