உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

புழலில் குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

புழல் பகுதியில் இருசக்கரவாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்காவுடன் வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :

புழல் பகுதியில் இருசக்கரவாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்காவுடன் வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்குன்றம் - செம்பியம் நெடுஞ்சாலை கதிா்வேடு பகுதியில் புழல் போலீஸாா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, அந்த வாகனத்தின் பெட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் புதுக்கோட்டையை சோ்ந்த அருண்குமாா் (27) என்பதும், சென்னை கொளத்தூரில் தேநீா் கடையில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

அந்த கடையில் விற்பனை செய்வதற்காக குட்கா பொட்டலங்களை கொண்டு செல்வதாக போலீஸாரிடம் அவா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.