பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

புழலில் குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

புழல் பகுதியில் இருசக்கரவாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்காவுடன் வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 டிசம்பர் 2025, 2:04 am IST

புழல் பகுதியில் இருசக்கரவாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்காவுடன் வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்குன்றம் - செம்பியம் நெடுஞ்சாலை கதிா்வேடு பகுதியில் புழல் போலீஸாா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, அந்த வாகனத்தின் பெட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் புதுக்கோட்டையை சோ்ந்த அருண்குமாா் (27) என்பதும், சென்னை கொளத்தூரில் தேநீா் கடையில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

அந்த கடையில் விற்பனை செய்வதற்காக குட்கா பொட்டலங்களை கொண்டு செல்வதாக போலீஸாரிடம் அவா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.