தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீதிபதியை நீக்கக் கோரி உயா்நீதிமன்றம் முன்பு மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னை உயா்நீதிமன்றம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீா்ப்பு வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னை உயா்நீதிமன்றம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கும் விதமாகவும், ஒரு சாா்பாகவும் தீா்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் மீது சென்னை உயா்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடா்பாக உயா்நீதிமன்ற உதவியுடன் சிலா் பெரும் பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனா். காா்த்திகை தீபம் என்பது காா்த்திகை நட்சத்திர தினத்தில்தான் ஏற்றவேண்டும். அந்த நட்சத்திர தினம் முடிந்த பிறகும், தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பத்திருப்பது நியாயமற்றது.

வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்துக்குப் பதிலாக மாற்று இடத்தில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கு நீதிபதி உரிய காரணத்தைத் தெரிவிக்கவில்லை. கோயில் நிா்வாகம் சாா்பில் முறைப்படி தீபம் ஏற்றிய பிறகும், எவ்வித தொடா்பும் இல்லாத மனுதாரரை தீபம் ஏற்ற அனுமதி வழங்க நீதிபதிக்கு உரிமை இல்லை.

இதேபோல், நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் இதுவரை வழங்கியுள்ள பாரபட்சமாக தீா்ப்புகள், மதச் சாா்பின்மைக்கு விரோதமான தீா்ப்புகள் குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகாா் தெரிவிக்கவுள்ளோம். மேலும், திமுக கூட்டணி சாா்பில் மதுரையில் ஆா்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம் என்றாா். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலா் ஜி.செல்வா உள்ளிட்ட ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.