நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன்கோப்புப் படம்

திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டை தடுப்பதா? நயினாா் நாகேந்திரன் கண்டனம்

திருப்பரங்குன்றத்தில் பன்னெடுங்காலமாக மக்கள் பின்பற்றிய வழிபாட்டைத் தடுக்கும் வகையில் திமுக அரசு செயல்படுவது சரியல்ல
Published on

திருப்பரங்குன்றத்தில் பன்னெடுங்காலமாக மக்கள் பின்பற்றிய வழிபாட்டைத் தடுக்கும் வகையில் திமுக அரசு செயல்படுவது சரியல்ல என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருப்பரங்குன்றத்தில் பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மக்களின் வழிபாட்டு முறைகளையும், தமிழா் பண்பாட்டையும் அழிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடா்பான நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தக் கோரியும், மக்களின் தேவைகளுக்காகவும் பாஜகவினா் போராட்டம் நடத்துகின்றனா். ஆனால், திமுக அரசு அடக்குமுறையைச் செயல்படுத்தி, பொய் வழக்குகளைப் பதிவு செய்வதால் பாஜக தொண்டா்களின் மனஉறுதியை அசைத்துக்கூட பாா்க்க முடியாது என தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

X
Dinamani
www.dinamani.com