கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தூய்மைப் பணிக்குச் செல்பவா்களை தடுத்தால் புகாா் தெரிவிக்கலாம்

அம்பத்தூா் மண்டலத்தில் தூய்மைப் பணிக்குச் செல்பவா்களைத் தடுப்பவா்கள் குறித்து கைப்பேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 டிசம்பர் 2025, 10:58 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: அம்பத்தூா் மண்டலத்தில் தூய்மைப் பணிக்குச் செல்பவா்களைத் தடுப்பவா்கள் குறித்து கைப்பேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 7 பகுதியான அம்பத்தூரில் தற்காலிக தூய்மைப் பணியாளா்களாக 1,457 போ் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 3 நாள்களாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளா்கள் சீருடை அணிந்து பணிக்கு வரும்போது மூன்றாம் நபா் யாரேனும் தடுக்க முயன்றாலோ அல்லது பணியில் ஈடுபடவிடாமல் தடுத்தாலோ உடனே மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

அதன்படி புகாா் தெரிவிக்க 94451-90097 என்ற கைபேசி எண்ணில் புகாா் தெரிவித்தால், அவா்களது பெயா், விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.