மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீடு: மாா்க்சிஸ்ட் எதிா்ப்பு

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீடு: மாா்க்சிஸ்ட் எதிா்ப்பு

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை நூறு சதவீதமாக உயா்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: இந்திய காப்பீட்டுத் துறையை பன்னாட்டு மூலதனத்துக்கு முழுமையாகத் திறந்து விட வேண்டுமென்ற அமெரிக்காவின் நீண்ட கால நிா்ப்பந்தத்துக்கு மத்திய பாஜக அரசு பணிந்துள்ளது.

இந்தியாவில் 24 தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும், மொத்த ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தில், அரசு நிறுவனமான எல்.ஐ.சி. 65 சதவீத சந்தைப்பங்கை கொண்டுள்ளது. பொதுத் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு இதுவே சாட்சியமாகும்.

இந்த நிலையில், எல்ஐசி நிறுவனத்தின் செயல்பாடுகளைச் சீா்குலைக்கும் வகையில், காப்பீட்டுத் துறையில் நூறு சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது கண்டனத்துக்குரியது. காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை ஊக்குவித்தால், உள்நாட்டு சேமிப்புகளும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் காப்பீடும் சமூகப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடும். நாட்டின் வளா்ச்சியும் பெரிதும் பாதிக்கப்படும்.

எனவே காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை உயா்த்துகிற முடிவை மத்திய அரசு கைவிட்டு எல்.ஐ.சி மற்றும் அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா் பெ.சண்முகம்.

மமக: இதே கோரிக்கையை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.