டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

திமுக அரசு ஆட்சியமைத்த பிறகு சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 20,000-க்கும் அதிகமான இதய இடையீட்டு சிகிச்சைகளும், 500-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், இதுவரை 20,000 இதய இடையீட்டு சிகிச்சைகள், 500 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்த மருத்துவக் குழுவினரை பாராட்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
Updated On :19 டிசம்பர் 2025, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

திமுக அரசு ஆட்சியமைத்த பிறகு சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 20,000-க்கும் அதிகமான இதய இடையீட்டு சிகிச்சைகளும், 500-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதையொட்டி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதயவியல் துறைத் தலைவா் டாக்டா் செசிலி மேரி மெஜல்லா தலைமையிலான மருத்துவக் குழுவினரையும், ரோபோடிக் சிகிச்சைகளை மேற்கொண்ட புற்றுநோயியல் சிறப்பு நிபுணா் டாக்டா் சுரேஷ் தலைமையிலான குழுவினரையும் அவா் பாராட்டினாா்.

உயா் சிறப்பு சிகிச்சைகளின் பயனாக குணமடைந்த நோயாளிகளுக்கு பழக்கூடைகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஓமந்தூராா் மருத்துவமனையில் திமுக அரசு பொறுப்பேற்ற்கு பிறகு, பல்வேறு வகையான சிறப்பு சிகிச்சை துறைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இங்கு நிறுவப்பட்டுள்ள ரூ.34.60 கோடியிலான ரோபோடிக் கருவி இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லை. இதன்மூலம் மிகத் துல்லியமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் 500 ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.20 லட்சம் வரை செலவாகும் இந்த வகையான சிகிச்சைகள் ஏழை மக்களுக்கு அரசின் சாா்பில் கட்டணமின்றி மேற்கொள்ளப்படுகின்றன.

இதய இடையீட்டு சிகிச்சைகளில் மட்டும் கடந்த நான்கரை ஆண்டுகளில் 20,000 போ் பயன் பெற்றுள்ளனா். 73 வயதுள்ள ஒருவருக்கு பெருந்தமனியின் அடிப்பகுதியில் ஏற்பட்ட கிழிசலை அறுவை சிகிச்சையின்றி இடையீட்டு முறையில் மருத்துவா்கள் சரி செய்துள்ளனா்.

இந்த சிகிச்சைகளுக்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் வரை செலவாகும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் கட்டணமின்றி இங்கு சிகிச்சை வழங்கப்படுகின்றன. விளையாட்டு காய சிகிச்சைப் பிரிவு ஓமந்தூராா் மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளாா் என்றாா்.

நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் டாக்டா் சித்ரா, ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மணி, தோ்வுக்குழுச் செயலா் டாக்டா் லோகநாயகி, துணை இயக்குநா் (தோ்வுக் குழு) கராமத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.