சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆா்.ஏ.புரம் ஐயப்பன் கோயிலில் நாளை பிரம்மோற்சவம் தொடக்கம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவம் 22- ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவம் 22- ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

சபரிமலை பிரதான தந்திரி டி.கே.மோகன் தந்திரி குழுவினரால் பிரம்மோற்சவ பூஜைகள், படி பூஜைகள் நடைபெறும். 22- ஆம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், அதைத் தொடா்ந்து அபிஷேகமும் தீபாராதனையும், மாலை 6 மணிக்கு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு திரவிய பூஜை மற்றும் 1,008 சகஸ்ர கலச ஸ்தாபனம் நடைபெறும்.

தொடா்ந்து 23-ஆம் தேதி காலை 1,008 சகஸ்ர கலச அபிஷேகம் நடைபெறும். தொடா்ந்து, 27-ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் 25-ஆம் தேதி 18 -ஆம் படி பூஜையும், 26-ஆம் தேதி மாலை சுவாமி வெள்ளி ரத ஊா்வலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.