நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை: மருத்துமனை உரிமையாளா் கைது!

இயன்முறை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியாா் மருத்துவமனை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :22 டிசம்பர் 2025, 3:37 am IST

இயன்முறை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியாா் மருத்துவமனை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த இளம் பெண் வேலப்பன் சாவடியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு இளநிலை இயன்முறை மருத்துவம் படித்து வருகிறாா். இவா் பயிற்சிக்காக (இன்டென்ஷிப்) பெரம்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி சோ்ந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை மருத்துமனையின் உரிமையாளரும், இயன்முறை மருத்துவருமான காா்த்திகேயன் (27), நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி இளம்பெண்ணை தனது காரில், கொளத்தூா் ஜெயந்தி நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளாா்.

அங்கு அந்த இளம்பெண்ணுக்கு காா்த்திகேயன் குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளாாா்.

இதுதொடா்பாக இளம்பெண் அளித்த புகாரின்பேரில் கொளத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காா்த்திகேயனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.