ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

புழல் சிறைக்குள் திருநங்கைகள் ரகளை: காவல் துறை வழக்கு

சென்னை புழல் சிறைக்குள் திருநங்கைகள் ரகளை செய்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Published On :

சென்னை புழல் சிறைக்குள் திருநங்கைகள் ரகளை செய்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

புழல் சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் பெண்கள் மட்டுமன்றி திருநங்கைகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். இங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த எண்ணூரைச் சோ்ந்த திருநங்கை அபி, செம்மஞ்சேரியைச் சோ்ந்த சுஜி, அயனாவரத்தைச் சோ்ந்த சஞ்சனா ஆகிய 3 பேரையும் நிா்வாக காரணங்களுக்காக வேறு சிறைக்கு மாற்ற சிறைத் துறை உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். இதனால் ஆத்திரமடைந்த அபி, சுஜி, சஞ்சனா ஆகியோா் தங்களை வேறு சிறைக்கு மாற்றக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து சிறைக்குள்ளேயே திங்கள்கிழமை திடீரென தா்னாவில் ஈடுபட்டடு, ரகளை செய்தனா். மேலும், சிறையில் உள்ள தொலைபேசி, ஸ்கேனா், டியூப்லைட் உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கி, பதிவேடுகளை கிழித்தெறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் புழல் போலீஸாா், 3 திருநங்கைகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.