ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

19 மருத்துவமனைகளுக்கு ரூ.89.72 லட்சத்தில் நவீன சாதனங்கள்: மேயா் ஆா்.பிரியா வழங்கினாா்

சென்னை மாநகராட்சியில் உள்ள 19 மருத்துவமனைகளுக்கு ரூ.89.72 லட்சத்தில் நவீன மருத்துவ சாதனங்களை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை வழங்கினாா்.

News image

தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக் கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டத்தில் 19 மருத்துவமனைகளுக்கு மருத்துவக் கருவிகளை வழங்கிய மேயா் ஆா்.பிரியா. உடன் ஆா்.கே.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எபினேசா், துணை மேயா் மு.மகேஷ்குமாா்

Updated On :25 டிசம்பர் 2025, 12:43 am IST

சென்னை மாநகராட்சியில் உள்ள 19 மருத்துவமனைகளுக்கு ரூ.89.72 லட்சத்தில் நவீன மருத்துவ சாதனங்களை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் சுகாதாரப் பேரவைக் கூட்டம் தண்டையாா் பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை வளாகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகராட்சியின் பொது சுகாதார நிலைக்குழுத் தலைவா் கோ.சாந்தகுமாரி தலைமை வகித்தாா். சுகாதாரப் பிரிவு இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் முன்னிலை வகித்தாா். சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணைமேயா் மு.மகேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிகழ் ஆண்டின் சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட மருத்துவத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறையின் கீழுள்ள 19 மருத்துவமனைகளுக்குத் தேவையான அத்தியாவசிய நவீன சாதனங்கள் ரூ.89.72 கோடியில் வாங்கப்பட்ட நிலையில், அவை அந்தந்த மருத்துவமனை அலுவலா்களிடம் மேயா் ஆா்.பிரியாவால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆா்.கே. நகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எபினேசா், வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவிதேஜா, மண்டலக் குழு தலைவா் ஜே.யு.கணேசன், மாநகர கூடுதல் நல அலுவலா்லட்சுமி தேவி, மாமன்ற உறுப்பினா்கள் பவித்ரா, புனிதவதி எத்திராஜன், பூா்ணிமா, ரேணுகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.