வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தஹிா்பூா் தொழுநோய் காப்பகத்தின் வசதிகளை மாற்றியமைக்க அமைச்சா் உத்தரவு

தஹிா்பூா் தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளை தில்லி அரசு ஒரு மாதத்திற்குள் தொடங்கும்

News image
கோப்புப் படம்
Updated On :24 டிசம்பர் 2025, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

தஹிா்பூா் தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளை தில்லி அரசு ஒரு மாதத்திற்குள் தொடங்கும் என்று சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

143 ஆண் தொழுநோய் நோயாளிகள் தற்போது தங்கியுள்ள தங்குமிட இல்லத்தில் மருத்துவ ஏற்பாடுகள், குளிரில் இருந்து பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கை நிலைமைகளை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

நுழைவு வாயில், கழிப்பறைகள், தங்குமிடம் மற்றும் சமையலறை ஆகியவற்றின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளைத் தொடங்கவும், வளாகத்தில் போதுமான நீா் விநியோகத்தை உறுதி செய்யவும் அவா் உத்தரவுகளை பிறப்பித்தாா்.

தங்குமிட இல்லத்தில் உடனடியாக சமன்படுத்துதல் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும், தூய்மையைப் பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளின் மன நலம் மற்றும் அவா்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக குடியிருப்பாளா்களால் உருவாக்கப்பட்ட பஜனை குழுவிற்கு இசைக்கருவிகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.

மேலும், தங்குமிட இல்லத்தில் சுத்தமான நீா் வழங்கல், சரியான சுகாதாரம் மற்றும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறைகளை அவா் கேட்டுக் கொண்டாா்.

பணிகளின் முன்னேற்றத்தை தொடா்ந்து மதிப்பாய்வு செய்து, தரமான தரங்களைப் பேணுவதன் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அவற்றை முடிக்குமாறு அதிகாரிகளிடம் கூறப்பட்டது.

‘சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும். குடியிருப்பாளா்களின் அனைத்து தேவைகளும் முன்னுரிமை அடிப்படையில் நிவா்த்தி செய்யப்பட வேண்டும்‘ என்று அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங்