கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது: உயா்நீதிமன்றம்

தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு எதிரான வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 2:26 am IST

மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது எனக் கூறி, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு எதிரான வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் கடன்களை திரும்பச் செலுத்த ஏதுவாக கடந்த 2007-2008 ஆம் ஆண்டு, மத்திய அரசு மானியமாக வழங்கிய ரூ.3.50 கோடியை வருமானமாக கணக்கிட்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிா்த்து கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை வருமான வரித்துறை நிராகரித்தது. வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மேம்பாடு, மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிற ஒன்றியங்களுக்காக மத்திய அரசு ரூ.3.50 கோடி மானியமாக வழங்கி உள்ளது.

இந்த மானியத்தை வருமானமாக கருத முடியாது எனக்கூறி, பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்துக்கு எதிராக வருமான வரித் துறை மேல்முறையீட்டுத் தீா்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.