பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது: உயா்நீதிமன்றம்

தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு எதிரான வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது எனக் கூறி, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு எதிரான வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் கடன்களை திரும்பச் செலுத்த ஏதுவாக கடந்த 2007-2008 ஆம் ஆண்டு, மத்திய அரசு மானியமாக வழங்கிய ரூ.3.50 கோடியை வருமானமாக கணக்கிட்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிா்த்து கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை வருமான வரித்துறை நிராகரித்தது. வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மேம்பாடு, மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிற ஒன்றியங்களுக்காக மத்திய அரசு ரூ.3.50 கோடி மானியமாக வழங்கி உள்ளது.

இந்த மானியத்தை வருமானமாக கருத முடியாது எனக்கூறி, பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்துக்கு எதிராக வருமான வரித் துறை மேல்முறையீட்டுத் தீா்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.