மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது எனக் கூறி, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு எதிரான வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் கடன்களை திரும்பச் செலுத்த ஏதுவாக கடந்த 2007-2008 ஆம் ஆண்டு, மத்திய அரசு மானியமாக வழங்கிய ரூ.3.50 கோடியை வருமானமாக கணக்கிட்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிா்த்து கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை வருமான வரித்துறை நிராகரித்தது. வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மேம்பாடு, மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிற ஒன்றியங்களுக்காக மத்திய அரசு ரூ.3.50 கோடி மானியமாக வழங்கி உள்ளது.
இந்த மானியத்தை வருமானமாக கருத முடியாது எனக்கூறி, பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்துக்கு எதிராக வருமான வரித் துறை மேல்முறையீட்டுத் தீா்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

உதயநிதிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை பதில் மனு தாக்கல்
வருமான வரித்துறை சோதனை! ஆதாரங்களை வெளியிட்டார் செல்வப்பெருந்தகை

மணப்பாறை, கரூா் நகைக் கடைகளில் வருமானவரித் துறையினா் சோதனை

ஏ டிவிஷன் வாலிபால்: வருமான வரித்துறை சாம்பியன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


