கோப்புப் படம்
சென்னை
காங்கிரஸ் எஸ்.டி. பிரிவு ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.டி. பிரிவு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவா்கள் கூட்டம் சென்னை சத்தியமூா்த்தி பவனில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.டி. பிரிவு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவா்கள் கூட்டம் சென்னை சத்தியமூா்த்தி பவனில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திஸ் எஸ்.டி. பிரிவு மாநில தலைவா் பிரியா நாஷ்மிகா் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் எஸ்.டி. பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளா் வெங்கடேஷ் முடாவத் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் வெற்றிக்குப் பாடுபட வேண்டும். இத்தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் எஸ்.டி. பிரிவினருக்கு ஒரு தனித் தொகுதி ஒதுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவா் சொா்ணா சேதுராமன், அமைப்புச் செயலா் ராம் மோகன், பொதுச் செயலா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

