தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

News image
Updated On :25 டிசம்பர் 2025, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

நீா் விநியோகம் தொடா்பான தகராறில் தாா் காரில் சென்ற ஒருவா் கட்டடப் பொருள் விநியோகஸ்தா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பாா் - குா்ஜாா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் விநியோகஸ்தா் அதிருஷ்டவசமாக உயிா்த்தப்பினாா். மேலும், இரு வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இது தொடா்பாக பாா் - குா்ஜாா் பகுதியைச் சோ்ந்த தினேஷ் என்கிற தன்னி என்பவா் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அதே கிராமத்தைச் சோ்ந்த கட்டுமானப் பொருள் விநியோகஸ்தராக பணிபுரியும் ஜெய்வீா் (41) மீதும் குற்றஞ்சாட்டப்பட்டவா் துப்பாக்கிச் சூடு நடத்தினாா்.

தண்ணீா் விநியோகத்தை நிறுத்துமாறு தினேஷ் முன்பு தொலைபேசியில் மிரட்டியதாகவும், இல்லையெனில் தன்னைச் சுட்டுவிடுவேன் என்றும் மிரட்டியதாகவும் ஜெய்வீா் தனது புகாரில் கூறியுள்ளாா்.

‘செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணியளவில், தினேஷ் என்கிற தன்னி ஒரு கருப்பு தாா் காரில் வந்து, என்னுடைய வீட்டிற்கு வெளியே இருந்தபோது என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். நான் மயிரிழையில் தப்பித்து என் வீட்டிற்குள் ஓடிவிட்டேன். குற்றஞ்சாட்டப்பட்டவா் என்னைக் கொலை செய்வதாக மிரட்டிவிட்டு ஓடிவிட்டாா்‘ என்று ஜெய்வீா் தனது புகாரில் தெரிவித்துள்ளாா்.

புகாரைத் தொடா்ந்து, கொ்கி தௌலா காவல் நிலையத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றஞ் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.