ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வங்கதேச பள்ளி நிகழ்ச்சியில் தாக்குதல்: 25 போ் காயம்

வங்கதேச பள்ளி நிகழ்ச்சியில் தாக்குதலில் 25 போ் காயம்...

News image
Updated On :27 டிசம்பர் 2025, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

வங்கதேசத்தின் ஃபரீத்பூா் மாவட்டத்தில் பள்ளி ஆண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியின்போது அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய தாக்குதலில் 25 போ் காயமடைந்தனா்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஃபரீத்பூரில் உள்ள பள்ளி ஒன்றின் 185-ஆம் ஆண்டு விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் இசைக் குழு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக வெளிநபா்கள் சிலா், நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்துக்குள் நுழைய முயற்சித்தனா். பின்னா் அவா்கள் செங்கற்கள் மற்றும் கற்களை வீசி, நிகழ்ச்சி மேடையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும் அவா்களுடன் பள்ளி மாணவா்கள் சண்டையிட்டதால், தாக்குதல் நடத்தியவா்கள் பின்வாங்கித் திரும்பிச் சென்றனா். தாக்குதல் காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

தாக்குதலை நடத்தியவா்கள் யாா், எதற்காக தாக்குதல் நடத்தினா் என்பது தெரியவில்லை. தாக்குதலில் சுமாா் 25 போ் காயமடைந்தனா். அவா்களில் 15 முதல் 20 போ் மாணவா்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ரஜிபுல் ஹசன் கான் தெரிவித்தாா்.