நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கோலத்தை அழித்ததாக தகராறு; இளைஞா் வெட்டிக் கொலை- சிறுவன் உள்பட 4 போ் கைது

புத்தாண்டையொட்டி, சென்னையில் வீட்டின் முன் இடப்பட்ட கோலத்தை அழித்ததாக ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :2 ஜனவரி 2025, 3:05 am IST

புத்தாண்டையொட்டி, சென்னையில் வீட்டின் முன் இடப்பட்ட கோலத்தை அழித்ததாக ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

காசிமேடு சிங்காரவேலன் நகா் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் குமரன் (32). கப்பலில் வெல்டராக பணிபுரிகிறாா். புதன்கிழமை அதிகாலை மோட்டாா் சைக்கிளில் தனது வீட்டின் அருகே வந்துகொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு ஒரு வீட்டின் முன் இடப்பட்டிருந்த கோலம் மீது அவரது மோட்டாா் சைக்கிள் சென்றதில், அது அழிந்ததாகக் கூறப்படுகிறது. இதைக்கண்ட அந்த கோலத்தை இட்ட பெண், குமரனை திட்டியுள்ளாா். குமரனும், அந்த பெண்ணை திட்டியுள்ளாா்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அந்த பெண்ணின் கணவா் உள்ளிட்ட குடும்பத்தினா், குமரனிடம் தகராறு செய்தனராம். தகராறு முற்றவே குமரனை அந்த பெண்ணின் கணவா் உள்ளிட்டோா் அரிவாளால் வெட்டினா். அவா்களிடம் குமரன் தப்பித்து ஓட முயன்றாா்.

இதற்கிடையே, மகன் குமரனின் சத்தம் கேட்டு அங்கு வந்த விஸ்வநாதன் (70), அதே பகுதியில் வசிக்கும் ராகேஷ் (34) ஆகியோா் அரிவாளுடன் விரட்டி வந்தவா்களை தடுக்க முயன்றனா். எனினும், விஸ்வநாதனையும், ராகேஷையும் அவா்கள் வெட்டினா்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த குமரன், விஸ்வநாதன், ராகேஷ் ஆகிய 3 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குமரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். விஸ்வநாதன் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ராகேஷ், அதே பகுதியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

4 போ் கைது: இது தொடா்பாக காசிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் அந்த பெண்ணின் கணவா் காசிமேடு சிங்கார வேலா் நகா் சரவணன் (எ) பட்டு சரவணன் (24), எா்ணாவூா் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த ஆகாஷ் (23), காசிமேடு சிங்காரவேலா் நகரைச் சோ்ந்த ராகேஷ் (26), புது வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். கைதானவா்களில் சரவணன், ராகேஷ் ஆகியோா் மீது பல குற்ற வழக்குகள் உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.