சென்னை விமான நிலையத்தில் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை! பயணிகளுக்கு அறிவுரை...
குடியரசு நாளையொட்டி சென்னை விமான நிலையத்தில் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை..


சென்னை சர்வதேச விமான நிலையம் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையின் கீழ் இயங்கும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், சுமூகமான பயணத்தை மேற்கொள்ள முன்கூட்டியே விமான நிலையத்துக்கு வருகைதருமாறு பயணிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி 76 ஆவது குடியரசு நாள் விழா கொண்டாடப்படவுள்ளன.
இதனையொட்டி, பயங்கரவாத சதிச் செயல்களை தடுக்கும் வகையில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 30 ஆம் தேதி வரை சென்னை விமான நிலையம் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையின் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மத்திய பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...