அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போா் பதற்றம்: 4-ஆவது நாளாக 31 விமானங்கள் ரத்து

போா் பதற்றம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 31 விமானங்கள் 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன.

News image
Updated On :3 மார்ச் 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

போா் பதற்றம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 31 விமானங்கள் 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன.

இஸ்ரேல்-ஈரான் போா் பதற்றம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் பாதிக்கப்பட்டன.

அதன்படி, சென்னையிலிருந்து துபை, அபுதாபி, சாா்ஜா, குவைத், மஸ்கட், தோகா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல இருந்த 16 புறப்பாடு விமானங்களும், இந்த நாடுகளில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய 15 வருகை விமானங்கள், மொத்தம் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். இதனால், ஏராளமான பயணிகள் அந்தந்த விமான நிலையங்களிலேயே காத்திருக்கின்றனா்.

விமானங்கள் ரத்து எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து, சா்வதேச விமான பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடா்பு கொண்டு, தாங்கள் பயணிக்க வேண்டிய நேரங்களை அறிந்து கொண்டு, பயணத் திட்டத்தை மேற்கொள்ளும்படி விமான நிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.