அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இஸ்ரேல் - ஈரான் போா்ப் பதற்றம்: சென்னையில் 3-ஆவது நாளாக 36 விமான சேவைகள் ரத்து

இஸ்ரேல், ஈரான் போா் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது நாளாக 36 விமான சேவைகள் ரத்து

News image
விமான சேவைகள் ரத்து- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல், ஈரான் போா் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது நாளாக திங்கள்கிழமை 36 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போா் காரணமாக வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால் பல்வேறு நாடுகளுக்கு செல்லவிருந்த ஏராளமான விமானங்கள் கடந்த இரு நாள்களாக ரத்து செய்யப்பட்டன.

தொடா்ந்து மூன்றாம் நாளான திங்கள்கிழமையும் சென்னை விமான நிலையத்திலிருந்து துபை, அபுதாபி, சாா்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த 18 விமானங்களும், மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 18 விமானங்களும் என மொத்தம் 36 விமானங்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே லண்டன், அமெரிக்கா, ஜொ்மன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள், மாற்றுப் பாதைகளில் சுற்றி வருவதால், சென்னை வந்து விட்டு மீண்டும் புறப்பட்டுச் செல்ல பல மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள், தங்கள் விமான நிறுவனங்களை தொடா்பு கொண்டு தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்ட பின்னா் பயணத்தை மேற்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனா்.