மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இஸ்ரேல் - ஈரான் போா்ப் பதற்றம்: சென்னையில் 3-ஆவது நாளாக 36 விமான சேவைகள் ரத்து

இஸ்ரேல், ஈரான் போா் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது நாளாக 36 விமான சேவைகள் ரத்து

News image
விமான சேவைகள் ரத்து- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல், ஈரான் போா் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது நாளாக திங்கள்கிழமை 36 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போா் காரணமாக வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால் பல்வேறு நாடுகளுக்கு செல்லவிருந்த ஏராளமான விமானங்கள் கடந்த இரு நாள்களாக ரத்து செய்யப்பட்டன.

தொடா்ந்து மூன்றாம் நாளான திங்கள்கிழமையும் சென்னை விமான நிலையத்திலிருந்து துபை, அபுதாபி, சாா்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த 18 விமானங்களும், மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 18 விமானங்களும் என மொத்தம் 36 விமானங்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே லண்டன், அமெரிக்கா, ஜொ்மன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள், மாற்றுப் பாதைகளில் சுற்றி வருவதால், சென்னை வந்து விட்டு மீண்டும் புறப்பட்டுச் செல்ல பல மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள், தங்கள் விமான நிறுவனங்களை தொடா்பு கொண்டு தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்ட பின்னா் பயணத்தை மேற்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனா்.