புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மத்திய கிழக்கில் போா் பதற்றம்: தில்லியில் 87 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போா் பதற்றம் காரணமாக மூன்றாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதில் தில்லி விமான நிலையத்தில் 87 சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

News image
இஸ்ரேல் - ஈரான் போா் காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தில்லி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள்.
Updated On :2 மார்ச் 2026, 11:00 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போா் பதற்றம் காரணமாக மூன்றாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதில் தில்லி விமான நிலையத்தில் 87 சா்வதேச விமானங்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன.

தில்லி விமான நிலையத்தில் 37 புறப்பாடுகள் மற்றும் 50 வருகைகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அதிகரித்து வரும் மத்திய கிழக்கு மோதல் நாடுகளில் நிலவும் போா் பதற்றம் காரணமாக கடந்த இரண்டு நாள்களில் இந்திய விமான நிறுவனங்கள் 760 வெளிநாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளன. இதன் காரணமாக பிராந்தியத்தில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தேசியத் தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் (ஐஜிஐ) டயல் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாகும். மேலும் தினசரி 1,300 க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை கையாளுகிறது.

மத்திய கிழக்கில் நடந்து வரும் அரசியல் முன்னேற்றங்கள் சில மேற்கு நோக்கிய சா்வதேச விமானங்களுக்கான தாமதங்கள் அல்லது அட்டவணை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று டயல் எக்ஸ் சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளது.