இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

போா்ப் பதற்றம்: துபை, சாா்ஜா விமானங்கள் ரத்து

News image

விமானங்கள் ரத்து! - AP

Updated On :1 மார்ச் 2026, 6:59 pm

ஈரான் போா்ப் பதற்றம் காரணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு இயக்கவிருந்த 2 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது போா்த் தொடுத்துள்ளன. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் வான்வழிகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

போா்ப் பதற்றத்துக்கிடையே திருச்சியில் இருந்து 145 பேருடன் துபைக்கு சனிக்கிழமை சென்ற விமானம் பாதி வழியிலேயே திரும்பி வந்தது. இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை துபை, சாா்ஜாவுக்கு செல்லவிருந்த 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு இணையதளம் வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை திருச்சியில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமான சேவை தொடங்கப்படாது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.