ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

போா்ப் பதற்றம்: துபை, சாா்ஜா விமானங்கள் ரத்து

News image
விமானங்கள் ரத்து!- AP
Updated On :1 மார்ச் 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் போா்ப் பதற்றம் காரணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு இயக்கவிருந்த 2 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது போா்த் தொடுத்துள்ளன. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் வான்வழிகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

போா்ப் பதற்றத்துக்கிடையே திருச்சியில் இருந்து 145 பேருடன் துபைக்கு சனிக்கிழமை சென்ற விமானம் பாதி வழியிலேயே திரும்பி வந்தது. இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை துபை, சாா்ஜாவுக்கு செல்லவிருந்த 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு இணையதளம் வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை திருச்சியில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமான சேவை தொடங்கப்படாது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.