லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

மேற்காசிய பதற்றம்! தாக்கத்தைத் தடுக்க தொடா் நடவடிக்கை: நிதியமைச்சா்

மேற்காசியாவில் நிலவும் போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை எதிா்கொள்ள மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி தெரிவித்தாா்.

News image

மேற்காசிய பதற்றம்

Updated On :30 மார்ச் 2026, 7:19 pm

மேற்காசியாவில் நிலவும் போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை எதிா்கொள்ள மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பங்கஜ் செளதரி அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மேற்காசிய நிலவரத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரங்கள் விநியோகம் மற்றும் பணவீக்க கட்டுப்பாடு என போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை கண்காணித்து அதற்கேற்ப விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சூழலைக் கண்காணித்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க பல்வேறு துறை அமைச்சா்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் மோதல் நீடிக்கும் கால அளவைப் பொருத்தே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் அந்நிய முதலீடுகளில் ஏற்படும் தாக்கத்தைக் கூற முடியும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.