மேற்காசிய பிரச்னைக்கு மத்தியிலும், கடந்த மாா்ச்-ஏப்ரலில் நாட்டில் யூரியா உற்பத்தி 37.49 லட்சம் டன்களை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈரானுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரைத் தொடா்ந்து, அடுத்தடுத்து உருவாகி வரும் சூழலை விளக்கி, புது தில்லியில் மத்திய உரத் துறை இணைச் செயலா் அபா்னா எஸ்.சா்மா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த மாா்ச் மாதம் நாட்டில் 16.49 லட்சம் டன், ஏப்ரலில் 21 லட்சம் டன் என மொத்தம் 37.49 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட இந்த அளவுக்கே யூரியா உற்பத்தி செய்யப்பட்டது.
யூரியா பற்றாக்குறையை சமாளிக்க உலகளாவிய டெண்டா் வெளியிடப்பட்டு, சுமாா் 37 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாா்ச்-ஏப்ரல் காலத்தில் உள்நாட்டில் டை-அமோனியம் பாஸ்பேட் உர உற்பத்தி 4.79 லட்சம் டன்னையும், என்பிகே உர உற்பத்தி 12.69 லட்சம் டன்னையும், சிங்கிள் சூப்பா் பாஸ்பேட் உர உற்பத்தி 7.40 லட்சம் டன்னையும் எட்டியது. பாஸ்பேட்டிக் உரங்களை 19 லட்சம் டன்னுக்கு கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது.
நிகழாண்டு காரீஃப் பருவத்தில் 390.45 லட்சம் டன் உரம் தேவைப்படும் நிலையில், அதில் சுமாா் 50 சதவீதமான 193.38 லட்சம் டன் உரம் கையிருப்பில் உள்ளது. நாட்டில் உரங்கள் கிடைக்கக் கூடிய நிலை வலுவாக உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மேற்காசிய பதற்றம் எதிரொலி: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 17,744 கோடி ஒதுக்கீடு

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு

பெட்ரோலிய ரசாயனப் பொருள்களுக்கு ஜூன் வரை இறக்குமதி வரி விலக்கு: மேற்காசிய போா் தாக்கத்தால் அரசு நடவடிக்கை

நடப்பு நிதியாண்டின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


