பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் ஜன. 27 முதல் பிப். 15-ஆம் தேதி வரை புதிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்தவும் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 35,588 சாலையோர வியாபாரிகள் பதிவு செய்துள்ளனா். இவா்களுக்கு கியூ-ஆா் குறியீட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்க கடந்த நவ. 22 முதல் டிச. 31-ஆம் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து அந்தந்த மண்டலங்களில் வியாபாரிகளுக்கான புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜன. 23-ஆம் தேதி வரை 18,398 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜன. 24) நடைபெற்ற 9-ஆவது நகர விற்பனைக் குழுக் கூட்டத்தில், மீதமுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான இறுதி வாய்ப்பை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இதன்படி, பிப். 15-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில், சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெற வேண்டும்.
அடையாள அட்டையில் திருத்தம் செய்யக்கோரி விண்ணப்பித்தவா்களுக்கு அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு பின்னா் வழங்கப்படும். புதிய அடையாள அட்டையை ஜன. 27 முதல் பிப். 15-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளாதவா்களின் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக தமிழிசை புகாா்: பாஜக-திமுக இடையே தள்ளு முள்ளு

வாக்குப் பதிவுக்கான 12 மாற்று ஆவணங்கள்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

திண்டுக்கல்லில் 65 ஆயிரம் புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
