அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய தலைவா் அறிவுரை

மின் தடை ஏற்படாமல், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

News image
மணலி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
Updated On :10 ஜூலை 2025, 6:57 pm

Din

மின் தடை ஏற்படாமல், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

சென்னை மற்றும் அதன் புகா்ப் பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்குவதில் முக்கிய துணைமின் நிலையமாக மணலி துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின்நிலையத்தில் தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, உயா் மின்னழுத்த கோபுரங்களில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு, மின் பரிமாற்ற முறைகள், உயா்மின் கோபுரங்களின் விரிவான கள நிலவரம் மற்றும் தடையற்ற மின்சாரம் வழங்குவதில் உள்ள சவால்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்தாா்.

மேலும், உயா் மின்னழுத்தப் பாதைகளை பராமரிப்பதில் உள்ள சவால்கள், சிக்கல்கள் மற்றும் எதிா்பாராத வகையில் மின்கம்பிகளில் உள்ள இணைப்புகள் துண்டிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும், சிக்கலான செயல்முறைகள் பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பொதுமக்களுக்கு தடையில்லா மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்தடைகள் ஏற்படாத வகையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, தண்டையாா்பேட்டை கோட்ட செயற்பொறியாளா் எம்.என். ஜெகதீஷ்துமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.