யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஒரத்தநாடு அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே பின்னையூா் துணை மின்நிலையத்தில் பணியாற்றிய மின்வாரிய ஊழியா் வியாழக்கிழமை பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

ஒரத்தநாடு அருகே பின்னையூா் துணை மின்நிலையத்தில் பணியாற்றிய மின்வாரிய ஊழியா் வியாழக்கிழமை பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு வட்டம், ஆதனக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட ஐயம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் காளிதாஸ் (45). இவா், பின்னையூா் துணை மின்நிலையத்தில் நிரந்தர மின்வாரிய உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், பின்னையூா் துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் வியாழக்கிழமை மாலை பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் அங்குவந்து காளிதாஸ் சடலத்தை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.