மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
தூத்துக்குடியில் மின் கம்பத்தில் ஏறி, மின் தடையை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.


தூத்துக்குடியில் மின் கம்பத்தில் ஏறி, மின் தடையை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, அண்ணா நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் சாமுவேல் (25). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த இவரது வீட்டில், ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மின்தடை ஏற்பட்டதாம்.
இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலையில், வீட்டருகே உள்ள மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிய சாமுவேல், அதை சரி செய்ய மின் கம்பத்தில் ஏறியுள்ளாா்.
அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச் சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...