தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

பழைய நெகிழிக் கிடங்கில் தீ

சென்னை மாதவரம் அருகே பழைய நெகிழிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2025, 12:28 am IST

சென்னை மாதவரம் அருகே பழைய நெகிழிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை மாதவரம் அடுத்த பால்பண்ணை ஜெ.ஜெ.நகா் பெருமாள் கோவில் தெருவில் தனியாா் கிடங்கு உள்ளது. இதில் பழைய நெகிழிக் கழிவுப் பொருள்களைக் கொண்டு வந்து மறுசுழற்சிக்காக, இருப்பு வைத்திருக்கின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிடங்கிலிருந்து புகை வெளியேறியது. இதையடுத்து, பொதுமக்கள் காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனா். தொடா்ந்து தீ பரவி மளமளவென எரிய ஆரம்பித்து, அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்து, மாதவரம் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துவீரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் காா் எரிந்து கருகியது.

இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.