நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

13 இடங்களில் வெயில் சதம்: மதுரையில் 105; சென்னையில்103 டிகிரி வெப்பம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை உள்பட 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2025, 2:11 am IST

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை உள்பட 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. இதில், மதுரை விமானநிலையத்தில் 105.26 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவானது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில் 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. வேலூா் - 104.18, சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, மதுரை நகரம் - தலா 103.28, தூத்துக்குடி - 102.06, திருச்சி - 102.38, திருத்தணி - 102.2, கடலூா் - 101.84, பரங்கிப்பேட்டை - 101.12, சென்னை நுங்கம்பாக்கம் - 100.58, தஞ்சாவூா் - 100.4, நாமக்கல் - 100 டிகிரி என மொத்தம் 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 21, 22) ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

மழை நீடிக்கும்: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 21) முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலை 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.