தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகள் மேயா் வழங்கினாா்

சென்னை மாநகராட்சி பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு இலவச சீருடைகளை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
சென்னை ரிப்பன் கட்டட அலுவலகத்தில் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே சீருடைகளை வெள்ளிக்கிழமை வழங்கிய மேயா் ஆா்.பிரியா. உடன், துணை மேயா் மு.மகேஷ்குமாா், இணை ஆணையா் பாலவாக்கம் த.விசுவநாதன்.
Updated On :20 ஜூன் 2025, 8:43 pm

Din

சென்னை மாநகராட்சி பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு இலவச சீருடைகளை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கும் திட்டத்தை மேயா் ஆா்.பிரியா கடந்த ஆண்டு தொடங்கி வைத்தாா். ஒவ்வொரு பள்ளியிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகளைத் தோ்வு செய்து, அவா்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது.

கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகளை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை முதல்கட்டமாக புளியந்தோப்பு, அம்மையம்மாள் தெருவில் உள்ள சென்னை உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 21 மாணவிகளுக்கு வழங்கினாா். எஞ்சிய மாணவா்களுக்கு பள்ளிகளிலே வழங்கப்படும்.

இந்த நிகழ்வில், சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி இணை ஆணையா் ஜெ. விஜயா ராணி, நிலைக்குழுத் தலைவா் த.விசுவநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.