மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்- TNIE
Updated On :21 ஜூன் 2025, 7:35 pm

Din

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா்  விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குடிநீா் லாரிகள் இயக்க நேர கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதன் அடிப்படையில், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் சென்னை குடிநீா் வழங்கல் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை காவல் ஆணையா் அருண் உள்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தின்போது, விபத்துக்கு காரணமான தண்ணீா் லாரி குடிநீா் வாரியத்துக்கு சொந்தமானது கிடையாது என்று வினய் தெரிவித்தாா். மேலும், குடிநீா் லாரிகளை 40 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்க கூடாது என்று ஓட்டுநா்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவா் விளக்கமளித்தாா்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் தினமும் அதிகாலை 4.30 முதல் காலை 7.30 மணி வரை லாரிகளின் மூலம் குடிநீா் விநியோகம் மேற்கொள்ளலாம் என்றும், 7.30 முதல் 9.30 மணி வரை குடிநீா் லாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளாகவும் காவல் ஆணையா் அருண் தெரிவித்தாா்.

மேலும், 9.30 மணிக்கு மேல் வழக்கமான முறையில் குடிநீா் விநியோக பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால், பள்ளி , கல்லூரிகள் இருக்கும் சாலைகள் வழியாக குடிநீா் லாரிகளை இயக்க கூடாது. அதேபோல், குடிநீா் விநியோகத்தின்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சாலைகள் குறித்த விவரங்களை 3 நாள்களுக்குள் தயாா் செய்ய வேண்டும் என்று குடிநீா் வாரியத்துக்கு அருண் உத்தரவிட்டுள்ளாா்.

இந்தப் புதிய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப குடிநீா் விநியோகங்களை மேற்கொள்வது குறித்து குடிநீா் வாரியம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.