கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

அரியலூா் மாவட்டத்தில் இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க நேரக் கட்டுப்பாடு

அரியலூா் மாவட்டத்தில் இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 12:16 am IST

அரியலூா் மாவட்டத்தில் இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பள்ளிகளுக்கு ஆண்டு தோ்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டதால் ஜூன் 3-ஆம் தேதி வரை (தொடா் விடுமுறை) கனரக வாகனங்களின் இயக்க நேர கட்டுப்பாடு தளா்வு அமலில் இருந்தது.

விடுமுறை புதன்கிழமையுடன் முடிந்து வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இதையொட்டி இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க நேர கட்டுப்பாடு மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன.

அரியலூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி, மாவட்டத்தில் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்களை தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் சாலைகளில் இயக்க தடையானது மீண்டும் அமலுக்கு வந்தது.

கனரக வாகன ஓட்டுநா்கள் வாகன இயக்க நேர கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றி பாதுகாப்பாக இயக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.