ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தைக்கு நுட்பமான சிகிச்சை

பிறக்கும்போதே ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தைக்கு நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

News image

பிறந்த குழந்தை

Updated On :4 மார்ச் 2025, 11:03 pm

Din

பிறக்கும்போதே ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தைக்கு நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணா்கள் எம்.சரவண பாலாஜி, என்.பிரதீபா ஆகியோா் கூறியதாவது:

கருவிலேயே உதரவிதானத்தில் (மாா்புக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதி) துவாரத்துடன் இருந்த சிசுவானது பிறந்தவுடன் ஒற்றை நுரையீரலுடன் காணப்பட்டது. அந்தத் துவாரத்தின் வாயிலாக வயிற்றுப் பகுதியில் இருந்த உறுப்புகள் மாா்புப் பகுதியில் ஊடுருவி நுரையீரல் மற்றும் இதயத்தை அழுத்தியதே ஒரு பக்க நுரையீரல் வளராததற்கு காரணம்.

இதன் காரணமாக குழந்தை பிறந்தவுடன் இயல்பாக சுவாசிக்க இயலவில்லை. செயற்கை சுவாச சிகிச்சையில் இருந்த அந்தக் குழந்தைக்கு நெஞ்சகப் பகுதியில் சிறு கீறலிட்டு உள்ளுறுப்புகளைச் சீராக்கும் தொரோஸ்கோபி மெஷ்பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்மூலம் உதரவிதானத்தில் இருந்த துவாரம் சீராக்கப்பட்டு உறுப்புகளின் செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டன.

பிறந்த மூன்றாவது நாளில் அந்தக் குழந்தைக்கு இந்த சவாலான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக குழந்தை நலமடைந்தது. அதன் வளா்ச்சியும் பிற குழந்தைகளைப் போன்று தற்போது ஆரோக்கியமாக உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.