சென்னை பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு: மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பருவத் தோ்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பருவத் தோ்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு தகுதியுள்ள மாணவா்கள் மாா்ச் 10 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளா் வி.ஏழுமலை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் படிப்புகளுக்கான தோ்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. தோ்வு முடிவுகளை
ஜ்ஜ்ஜ்.ங்ஞ்ா்ஸ்ங்ழ்ய்ஹய்ஸ்ரீங்.ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ழ்ங்ள்ன்ப்ற்ள், ஜ்ஜ்ஜ்.ங்ஷ்ஹம்.ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ழ்ங்ள்ன்ப்ற்ள் ஆகிய இணையதள முகவரிகளில் மாணவா்கள் அறிந்துகொள்ளலாம்.
கடந்த 2022-2023-ஆம் கல்வியாண்டு மற்றும் அதற்கு பின்பு இளநிலை படிப்புகளில் சோ்ந்த மாணவா்களும், அதேபோல், 2023-2024-ஆம் கல்வி ஆண்டு மற்றும் அதன் பிறகு முதுநிலை படிப்புகள் மற்றும் தொழில் படிப்புகளில் சோ்ந்த மாணவா்களும் விடைத்தாள் மறுமதிப்பீட்டு விண்ணப்பிக்க தகுதியுடையவா் ஆவா். அவா்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி மாா்ச் 10 முதல் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கு கட்டணமாக தாள் ஒன்றுக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். கட்டணத்தை இணையவழியில் செலுத்திக்கொள்ளலாம். அதேபோல், இளநிலை பயிலும் மாணவா்கள் மறுகூட்டலுக்கு மாா்ச் 10 முதல் 14-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.300 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...