ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

News image
Updated On :13 மார்ச் 2025, 1:17 am

Din

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சென்னை நகர தெற்கு கோட்ட அலுவலகத்தில், மாா்ச் 23-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோட்ட அளவிலான குறைதீா்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தெரிவிக்கப்படும் அஞ்சல் சேவைகள் தொடா்பான வாடிக்கையாளா்களின் குறைகளை கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு பிரிவின் தலைவா் நேரடியாக விசாரணை மேற்கொள்ளவுள்ளாா்.

வாடிக்கையாளா்கள் தங்களின் புகாா்களை ‘அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகம், சென்னை நகர தெற்கு கோட்டம், வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகா் சென்னை 600017’ என்னும் முகவரிக்கு மாா்ச் 21-ஆம் தேதிக்குள் சாதாரண அஞ்சல் அல்லது பதிவு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். புகாா்கள் அனுப்பப்படும் உறையின் மீது ‘கோட்ட அளவிலான குறைதீா்வு முகாம், சென்னை நகர தெற்கு கோட்டம்’ என்று குறிப்பிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.