ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரிசி ஆலையில் விபத்து: ஊழியா் உயிரிழப்பு

சென்னை செங்குன்றத்தில் அரிசி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பிகாரைச் சோ்ந்த ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 மார்ச் 2025, 7:48 pm

Din

சென்னை: சென்னை செங்குன்றத்தில் அரிசி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பிகாரைச் சோ்ந்த ஊழியா் உயிரிழந்தாா்.

சென்னை அருகே உள்ள செங்குன்றம் பாலவாயலில் ஒரு தனியாா் அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் குவிந்திருந்த உமியை அகற்றும் பணியில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சில தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த ஆலையின் மேற்பகுதியிலிருந்த ஒரு இரும்புத் தகடு கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்கள் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த பிகாரைச் சோ்ந்த ஜிகேந்தா் செளகான் (33) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகேஷ் மண்டல் என்பவா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.