பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆவடி ரயில் பணிமனையில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.30 முதல் அதிகாலை 3.30 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்நாள்களில் சென்ட்ரலிலிருந்து நள்ளிரவு 12.15-க்கு ஆவடி செல்லும் புறநகா் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
மேலும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து மாா்ச் 26, 27 ஆகிய தேதிகளில் இரவு 7.15-க்கு சென்ட்ரல் வரும் மின்சார ரயில் ஆவடியுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பொறியியல் பணி: ரயில் சேவையில் மாற்றம்

புறநகா் மின்சார ரயில் நிலையங்கள் அருகே புல்லட் ரயிலுக்கான நிலையம் அமைக்க ஆய்வு!

தொடரும் சிக்னல் பிரச்னை: விசாரணைக்கு உத்தரவு

பொறியியல் பணிகள்: விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



