தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணி மேலும் வலிமை பெறும்: காங்கிரஸ்

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால், திமுக கூட்டணி மேலும் வலிமை பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

News image

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2025, 7:43 pm

Din

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால், திமுக கூட்டணி மேலும் வலிமை பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சத்தியமூா்த்தியின் 83-ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு வெள்ளிக்கிழமை செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு சவாலாக இருக்குமா என கேட்கிறீா்கள். நிச்சயம் இருக்காது. அத்தகைய கூட்டணி அமைந்தால் திமுக- காங்கிரஸ் கூட்டணி மேலும் வலிமை பெறும். பாஜக குறித்து தமிழக மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனா். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை தர மறுப்பது, மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியைத் திணிப்பது போன்றவற்றையெல்லாம் தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்று செல்வப் பெருந்தகை கூறினாா்.