நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image
Updated On :30 மார்ச் 2025, 2:09 am IST

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் லெஜண்ட்ஸ் மற்றும் பிரேசில் லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி சென்னை ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியைக் காண 20,000 பாா்வையாளா்கள் வருகை தருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காா், இரு சக்கர வாகனங்களில் வருவோா் பாா்க் சாலையில் வலதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புற வழியாக வாகன நிறுத்துமிடமான ‘பி’ மைதானம், ‘சி’ மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கிருந்து விளையாட்டு மைதானத்தை அடையலாம்.

ராஜா முத்தையா சாலையில் மாநகர பேருந்துகள் இயக்க தடைவிதிக்கப்படும். அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஈவெரா பெரியாா் சாலை, ஈ.வி.கே. சம்பத் சாலை, டவுட்டன், நாராயண குரு சாலை, சூளை நெடுஞ்சாலை, டெமெல்லஸ் சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

இதேபோல், எழும்பூா் ரயில் நிலைய பகுதியில் இருந்து வாகனங்கள் நேராக சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி சென்று, பாா்க் சாலை இடதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புற வழியாக வாகன நிறுத்துமிடமான ‘பி’ மைதானம் மற்றும் ‘சி’ மைதானத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.

அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது சூளை ரவுண்டானாவிலிருந்து நேரு விளையாட்டு மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக, சூளை நெடுஞ்சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை, ஈவெரா பெரியாா் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படும். அதேபோல ஜொ்மையா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை (வேப்பேரி காவல் நிலையம்) சந்திப்பிலிருந்து நேரு விளையாட்டரங்கு நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.