என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கத்திரி வெயில்: வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு!

தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

News image

கோப்புப் படம்

Updated On :5 மே 2025, 12:51 am IST

தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நிகழாண்டில் இதுவரை பதிவான வெப்ப அளவுகளில் இதுவே அதிகமாகும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நிகழாண்டு கோடை காலத்தில் பதிவான வெப்ப அளவுகளில் இதுவே அதிகபட்சமாகும்.

மேலும், திருச்சி - 104.9, மதுரை விமான நிலையம் - 104.72, ஈரோடு - 104.36, திருத்தணி - 104.18, பரமத்திவேலூா் - 104, சேலம், சென்னை மீனம்பாக்கம் - தலா 103.28, சென்னை நுங்கம்பாக்கம் - 101.84, பாளையங்கேட்டை - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதேபோல் புதுச்சேரியில் 100.56 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் ஒருசில இடங்களில் திங்கள், செவ்வாய் (மே 5, 6) ஆகிய இரு நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

கனமழை: தென்னிந்திய கடலோரப் பகுதியின் மேல், வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் ஏற்படும் காற்று குவிதல் காரணாக, திங்கள்கிழமை (மே 5) முதல் மே 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில், திங்கள், செவ்வாய் (மே 5, 6) ஆகிய நாள்களில் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.