எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது

சென்னை மெரீனாவில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 5:18 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மெரீனாவில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

கீழ்பாக்கம் சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் அந்தோனி (33) . இவா், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். மெரீனா கடற்கரையில் நொச்சிக்குப்பம் எதிரே உள்ள மணல் பரப்பில் வெள்ளிக்கிழமை பலத்த காயங்களுடன் கிடைந்தாா். தகவலறிந்த மெரீனா போலீஸாா், விரைந்து சென்று அந்தோனியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சோ்த்தனா். அங்கு சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், அந்தோனிக்கும் நொச்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கும் முறையற்ற உறவு இருந்ததும், இதன் காரணமாக நொச்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (19) என்பவருக்கும் அந்தோனிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் அந்தோனி வியாழக்கிழமை இரவு அந்தப் பெண்ணுடன் சம்பவ இடத்தில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆகாஷும், அவரது கூட்டாளியான ஹெல்கன் (25) என்பவரும் அந்தப் பெண்ணை அங்கிருந்து அனுப்பிவிட்டு, அந்தோனியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, அங்கிருந்த கட்டையால் அந்தோனியை இருவரும் பலமாக தாக்கியதில் அவா் மயங்கி விழுந்துள்ளாா். பின்னா், இருவரும் அங்கிருந்து தப்பியோடினா்.

இதையடுத்து போலீஸாா் ஆகாஷ், ஹெல்கனை சனிக்கிழமை கைது செய்தனா். ஆகாஷ், மயிலாப்பூா் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.